ஒரு தெருவில் சிற்பி ஒருவன் வசித்து வந்தான். ஒரு முறை ஒரு பெரிய பாறையை தன் கூடாரத்திற்கு உருட்டி வந்தான். அவன் தினந்தோறும் அந்தப் பாறையை தன் கையில் வைத்திருந்த உளியால் அடிக்கும்போது மேல் இருக்கும் கற்கள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது. பின்பும் சிற்பி பாறையை உளியால் 5 வருடங்களாக அடித்து அடித்து விலைமதிக்க முடியாத ஒரு அழகிய சிலையை உருவாக்கினார். இப்பொழுது அந்த சிலையை கொண்டு ஒரு பெரிய அரங்கத்தில் கொண்டு வைத்தான் சிற்பி. இப்போது மண்டபத்திற்குள் செல்ல படிகள் உருவாக்க வேண்டும் என்ன செய்வது என்று சற்று யோசித்தார் ஒரு நல்ல யோசனை கிடைத்தது, பாறைகளில் உள்ள துண்டுகளை சேர்த்து படிகளை உருவாக்கினார் இப்பொழுது மண்டபத்துக்குள் வருகிறவர்கள் எல்லாரும் அந்த சிலையை பார்த்து புகழ்கிறார்கள் அதன் பக்கத்தில் நின்று போட்டோக்கள் எடுக்கிறார்கள் .இப்போது சிலை மிகவும் புகழ் பெற்று விட்டது. எல்லாரும் சிலையைப் பற்றியே புகழ்ந்து பாடினார்கள். இப்படி இருக்கும் போது படிகளுக்கு சிலையை புகழ்ந்து பாடுவது பிடிக்கவில்லை ஒருநாள் மண்டபத்திலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள் அப்போது இந்த சிறு சிறு துண்டுகள் சிலையை பார்த்து கேட்டது உன்னை செதுக்கிய பாறைகளில் இருந்து தான் நாங்க உடைக்கப்பட்டோம் உன்னை செதுக்கிய சிற்பியின் கரங்களில்தான் நாங்கள் இருந்தோம் ஆனால் இப்போது உனக்கு மரியாதை கிடைக்கிறது எங்களுக்கும் அவமரியாதை கிடைக்கிறது. உன்னை எல்லோரும் மதிக்கிறார்கள் எங்களை எல்லோரும் மிதிக்கிறார்கள் ,எல்லாரும் போட்டோ எடுக்கிறார்கள் எங்களை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை என்று புலம்பியது அமைதியாக சொன்னது சிலை ஒரு அடித்தவுடன் நீங்கள் கீழே விழுந்து விட்டீர்கள் அதனால் நீங்க கீழே மிதிபடுகிறீர்கள். நான் வருட கணக்காக அடியை பொறுத்து கொண்டதால் எல்லாராலும் மதிக்கப்படுகிறேன் என்றது சாந்தமாக,

No comments:
Post a Comment